Posts

Showing posts from May, 2023

மாம்பழம் சாப்பிடுறது உங்களுக்கு விருப்பமா? அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க ...!

Image
     மாம்பழம் உண்பதற்கு சரியான நேரம் ...!!  நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வருவதன் காரணமாக உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம்.      சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளையும், நீர்சத்து மிக்க உணவுப் பொருட்களை உட்கொள்வது உடலில் எலெக்ட்ரோலைட் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும்,வெப்பத்தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவும் .கோடை காலத்தில் பலரும் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.  தர்பூசணி , முலாம்பழம் , மாம்பழம் ,போன்ற பருவ கால பழங்களை  உட்கொள்வது செரிமானத்திற்கு உதவும்.நீரிழப்பை தடுக்கும்.       மாம்பழம் சாப்பிட சரியான நேரம் : -   கோடை காலத்தில் பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.அதனை சரியான நேரத்தில் , சரியான அளவில் சாப்பிடுவது முக்கியம் . இல்லாவிட்டால் உடல் உபாதை பிரச்சனையை   எதிர்கொள்ள நேரிடும். மதிய உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.     இதுகுறித்து உணவியல் நிபுணர் " மன்பிரீத் கலர் , "நாம் உண்ணும் உணவு சிக்கலின்றி செரிமானத்திற்கு உள்ளாக வேண்டும்.க...

ஆபத்தான 5 வெள்ளை உணவுகள் !!!!!!!!!!

Image
  ஆபத்தான 5  வெள்ளை உணவுகள் !!!        உப்பு :-        உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொண்டால் அது இதய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.பதப்படுத்தப்பட்டு பாக்கெட்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளில்,அவை கெட்டு போகாமல் இருப்பதற்காக அதிக அளவில் உப்பு கலந்திருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இதய நோய்,ரத்த அழுத்தம் உள்பட நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.   பால் :-     பால் சாது நிறைந்தது.பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டது.உடல் உறுப்புகளுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.ஆனாலும் அதனை அளவோடு உட்கொள்வது அவசியமானது.சிலருக்கு பால் ஒவ்வாமை பிரச்னை ஏற்படக்கூடும்.  அப்படிப்பட்டவர்கள் பாலை தவிர்ப்பது சிறந்தது.அதற்கு பதிலாக சோயா பால்,பாதாம் பால் பருகலாம்.காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.   வெள்ளை சர்க்கரை :-   வெள்ளை சர்க்கரையை அதிகம் சேர்த்துக் கொள்வது பல் சொத்தையை ஏற்படுத்தும்.மனச் சோர்வையும் உண்டாக்கும்...

கோடையில் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள் !!!

Image
 கோடையில் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள் !!!   கோடை காலத்தில் நிலவும் வெப்பநிலையை உடல் சமாளிப்பதற்கு உணவுக்கட்டுப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம்.ஏன்எனில் பல உணவுகள் நீரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உடல் உபாதைகளுக்கு ஆளாக்கிவிடும்.வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 10 உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு  ......   1  .காப்பி : -      நீரிழப்புக்கு வழிவகுப்பதுடன் உடலின் வெப்ப நிலையை கூட அதிகரிக்க செய்துவிடும்.வெயில் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் காப்பியை தவிர்ப்பது நல்லது.முழுவதுமாக கைவிட முடியாவிட்டாலும்,காப்பி பருகும் அளவை குறையுங்கள்.  2  ஊறுகாய் : -     சோடியம் அதிகம் கலந்திருக்கும் ஊறுகாய் நீரழிவை ஏற்படுத்தும்.மேலும் கோடையில் ஊறுகாயை அதிகாமாக சாப்பிடுவதும் அஜீரணத்தை உண்டாக்கும்.  3 . உலர் பழங்கள் : -     உலர் பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவைதான் என்றாலும் கோடையில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள்.ஏனெனில் அவை உடல் வெப்ப நிலையை அத...

கழுத்து வலி வருவது எதனால் .....?

Image
  கழுத்து வலி வருவது எதனால்.... ?               கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கழுத்து வலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தது.இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும் கூட வந்துவிடுகிறது.கழுத்து வலிக்கு முக்கிய காரணம் , கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான் .அப்போது கழுத்தை தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை.அதன் வெளிப்பாடுதான் கழுத்துவலி.அதிக சுமையை தலையில் தாங்குவது , நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல்  ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும். கழுத்து எலும்புகளில் தேய்வு , இடை சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்துவலி ஏற்படலாம்.பொதுவாக 40  வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம் ,  பலரும் உக்காந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிகாமாகிவிட்டதுதான் . கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்க்கு உதாரணமாக சொல்லலாம்.    இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு டிவி பார்ப்பது , படுத்து...

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)