கழுத்து வலி வருவது எதனால் .....?

  கழுத்து வலி வருவது எதனால்.... ?

      

    


 கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கழுத்து வலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தது.இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும் கூட வந்துவிடுகிறது.கழுத்து வலிக்கு முக்கிய காரணம் , கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான்.அப்போது கழுத்தை தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை.அதன் வெளிப்பாடுதான் கழுத்துவலி.அதிக சுமையை தலையில் தாங்குவது , நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் 



ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.



கழுத்து எலும்புகளில் தேய்வு,இடை சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்துவலி ஏற்படலாம்.பொதுவாக 40  வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம் , 


பலரும் உக்காந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிகாமாகிவிட்டதுதான் . கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்க்கு உதாரணமாக சொல்லலாம். 



 இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு டிவி பார்ப்பது , படுத்துக்கொண்டே படிப்பது,



படுத்துக்கொண்டே டிவி பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது , தலையணைகளை தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது,வேலைக்கு செல்ல பல மணி நேரம் பயணிப்பது,பயணங்களில் உட்காந்துக்கொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்கு காரணமாகிவிடும்.


 இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஒட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள்.அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டே பேசுகிறார்கள்.


இந்த தவறான பழக்கம் நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்துகிறது .  குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியை சீக்கிரத்தில்  கொண்டு வந்துவிடும்.


 கழுத்தை ஸ்கேன்  அல்லது எம் ஆர்  ஐ ஸ்கேன் எடுத்து இன்று நவீன காலங்களில் நோயின் தன்மையை புரிந்து கொள்ளலாம்.


 ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியை எளிதில் குணப்படுத்தி விடலாம். பிஸியோதெரபி சிகிச்சை போன்றவை பலன் தரும்.நோயின் தன்மையை பொறுத்து எலும்பு அல்லது நரம்பு நலச் சிறப்பு மருத்துவரை நேரில் பார்த்து ஆலோசனை எடுத்துக்கொள்ளலாம்.



 உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக தெரிந்தால் ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும்.புதிதாகவும் வலி தோன்றலாம்.



எனவே , கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டு , தேவைப்பட்டால் உளவியல் சிகிசிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.இது குணப்படுக்கூடிய ஒன்றுதான் என்கிறார்கள் மருத்துவர்கள். 

Comments

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)