Posts

Showing posts from June, 2023

சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா?

Image
  சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யலாமா? உணவு உட்கொண்ட பிறகு சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இந்த பழக்கம் பழங்காலம் முதலே உலகெங்கிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. சாப்பிட்டதும் நிதானமாக சிறிது நேரம் உலவுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அத்தகைய நடைப்பயிற்சியை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.  செரிமானத்திற்கு உதவும் : உணவு உட்கொண்டதும்  நிதானமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுவது செரிமான அமைப்பின் செயல்பாடுகளை தூண்டிவிட உதவும். குறிப்பாக செரிமான பாதைக்கு இடையூறாக இருப்பவற்றை நிவர்த்தி செய்து உணவு தடையின்றி செரிமானமாக ஊக்குவிக்கும். நடக்கும்போது செரிமான செயல்பாடுகள் சுமுகமாக நடப்பதால் உணவில் இருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துகள் முழுவதையும் உடல் உறிஞ்சும் செயல்முறையும் சீராக நடைபெறும். உணவு உண்டபின் நடப்பதன் மூலம் வயிற்று உப்புசம், அஜீரணம் போன்றவற்றுடன் தொடர்புடைய அசவுகரியன்களையும்  தவிர்க்கலாம்.   ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும்: ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதில் உணவுக்கு பிந்திய நடைப்பய...

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

Image
  நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா  சர்வதேச யோகா தினம்   இன்று கடைபிடிக்கப்படுகிறது. உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புத்தன்மை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. மன அழுத்த நிவாரணி  Breating exercise இளைஞர் பலர் கட்டுடலுக்காக ஜிம் முக்கு செல்கிறார்கள் . Gym workouts ஆனால் கட்டுடலுடன் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது யோகா. இந்த பயிற்சியை செய்ய எந்த ஒரு உபகரணங்களும் தேவையில்லை. மருந்துகள் இல்லாமல் நோயை விரட்டுவது இதன் தனித்துவ குணம். யோகாவில் ஏராளமான ஆசனங்கள் உள்ளன. கல்வியை போல தான் இதுவும் கடல் போன்றது. இருப்பினும் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை அடிப்படை யோகா பயிற்சிகளை செய்தாலே நாள் முழுவதும்  சுறுசுறுப்பாக உழைக்க ஆற்றலை தருகிறது. Meditation இன்றைய குடும்ப, பணி சூழல், மன அழுத்தம் நிறைந்ததாக மாறி இருக்கிறது. மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும் சிறந்த நிவாரணியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்கள்  எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள...

நீரழிவு என்பது நோய் அல்ல , இது ஒரு ஊட்டசத்துக்குறைபாடு

Image
   தமிழ்நாட்டில் 14.4 சதவீதத்தினருக்கு பாதிப்பு இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரழிவு !!!  அதிரவைக்கும் ஆய்வு தகவல்கள் !!!    இந்தியாவில் 10 கோடி பேருக்கும் அதிகமான நீரழிவு  நோயாளிகள்  இருக்கின்றனர்.தமிழ்நாட்டில் சதவீதத்தினருக்கு நீரழிவு பாதிப்பு உள்ளது என்ற அதிர வைக்கும் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது .  10 கோடியே 10  லட்சம் :- சர்க்கரை நோய் உண்டாக காரணங்கள்    இந்தியாவில் நீரழிவு  நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.இது அதிரவைப்பதாக அமைந்துள்ளது.   இந்த நிலையில்,இந்தியர்கள் ஆரோக்கியம் பற்றிய ஆய்வை சென்னை நீரழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும் , இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ( ஐசிஎம்ஆர் )  ICMR சேர்ந்து நடத்தின .   இந்த ஆய்வு கட்டுரை இங்கிலாந்து நாட்டில் வெளியாகிற " தி லான்செட் டயாபெடிக்ஸ் அண்ட் எண்டாகிரிஃநௌலெட்ஜ்" பத்திரிகையில்  வெளியாகி உள்ளது.   அதன் முக்கிய அம்சங்கள்  :     இந்தியாவில் 2019  ம் ஆண்டு 7 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.தற்பொழு...

அச்சுறுத்தும் முதுகுவலியை எதிர்கொள்வது எப்படி ??

Image
       அச்சுறுத்தும் முதுகுவலி !!!   முதுகுவலி எல்லா வயதினரும் எதிர்கொல்லும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது.இன்றைய டிஜிட்டல் யுகத்தில் முதுகுவலி ஏற்படுவதற்கு பல காரணங்களால் இருந்தாலும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உக்காந்திருப்பதும் , மன அழுத்தமும் முக்கிய காரணம். வயது அதிகரிக்கும்பொழுது  முதுகுவலியின் வீரியம் அதிகரிக்கும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதுகுவலியை தவிர்க்க :- முதுகுவலியை தவிர்க்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை முதுகை நேர் நிலையில் வைத்தபடி நின்று கை, கால்களை நீட்டி எளிய பயிற்சிகளை செய்யலாம். இடுப்புக்கு வலிமை சேர்க்கும் பயிற்சி :- இடுப்புக்கு வலிமை சேர்க்கும் பயிற்சிகளை மேற்கொள்வதும் முதுகுவலியை தடுக்க உதவும். 2050-ம் ஆண்டுவாக்கில் உலக அளவில் 80 கோடி பேர் முதுகுவலி பாதிப்புக்கு ஆளானவர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இது 2 020-ம் ஆண்டை ஒப்பிடும்போது 36 சதவீதம் அதிகரிக்கும்.  முதுகுவலியை தடுக்க மேற்கொள்ளவேண்டிய சில விஷயங்கள் :- உடல் தோரணையை நேரான நிலையில் வைத்திருக்க பழக்க வேண்டும்.   உடல் பருமனாக இருந்தால் உ...

Popular posts from this blog

சர்க்கரை நோயாளிகள் பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்?

நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா

சிசேரியன் பிரசவமும் அதனால் ஏற்படும் தழும்புகளும் வலியை போக்க உதவும் மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து)