சர்க்கரை நோய் என்றால் என்ன
சர்க்கரை நோய் என்றால் என்ன?
நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையைக் கொழுப்பாகவும், கிளைகோ ஜென்னாகவும் சேமித்து வைக்க உதவுகிறது.
நாம் சாப்பிடும் உணவின் அளவுக்குத் தக்கவாறு இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப் பணியைச் செய்கிறது.
பல காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது.
இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அது 180 மில்லிகிராம் சதவீதத்தைத் தாண்டும் போது சிறுநீரிலும் சர்க்கரை வெளியாகிறது. இதுதான் சர்க்கரை நோய்.
காரணங்கள்:-
2.அதிக கொழுப்பு ( High Fat / Cholestrol )
3. இருதய நோய் ( Cardio Vascular Disease)
4 .இரத்த கொதிப்பு ( High BP)
5. குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பவர்கள் ( Genetically
6.உடல் உழைப்பு, உடற்பயிற்சி இன்மை ( Lack of work / Exercise )
7.கவலை, மன உளைச்சல் ( Depression / Stress )
சர்க்கரை நோயின் பாதிப்புகள் :-
ரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து சர்க்கரையையும் (குளுக்கோஸ்) உடலால் செயல்படுத்த முடியாதபோது இது ஏற்படுகிறது; அதன் சிக்கல்கள் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு,
சிறுநீரக செயலிழப்பு மற்றும் காலைத் துண்டிக்கும் அளவுக்கான பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு கொண்டு செல்லும்.
மேலும் இது ஒரு வளர்ந்து வரும் சர்வதேச பிரச்னை ஆகி வருகிறது - உலகளவில் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர் - உலக சுகாதார அமைப்பு (WHO) தரவின்படி, இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது நான்கு மடங்கு அதிகமாகியுள்ளது.
நீரிழிவு தாக்கம் பற்றிய ஆபத்துகள் இருந்தபோதிலும், இதனால் பாதிக்கப்படுவோரில் பாதி பேர் அதைப் பற்றி அறியாதவர்களாக உள்ளனர்.






Comments
Post a Comment