நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் சாப்பிடும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக அமைகிறது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது (WHO).நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான முறையில் நமக்கு தினசரி கிடைக்காததால் , நமக்கு ஏராளமான நோய்கள் ஏற்படுகிறது.நம் உணவு பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் எவ்வாறு மருந்தில்லா வாழ்க்கையை வாழ்வது என்பதை கற்றுக்கொடுப்பதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இத்தளத்தின் நோக்கம் ஆகும்.
பொதுவாக உணவுக்காக பயன் படுத்தப்படும் எண்ணெய்களில் MUFA, PUFA மற்றும் SFA என்ற 3 வித கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை வேறுபட்ட வீதங்களில் எண்ணெயில் காணப்படும்;. SFA என்ற கொழுப்பில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அது இரத்தத்தில் உள்ள தீய கொலஸ்டெரோலை (LDL) அதிகரிக்கச் செய்து விடும். ஆனால் MUFA நேர் எதிராக செயற்பட்ட வண்ணம் நல்ல கொலஸ்டெரோலை அதிகரிக்கச் செய்து தீய கொலஸ்டெரோலை குறைத்து விடும். அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் ஆய்வு தரவுகளின் படி ஒரு மேசைக் கரண்டி ஆலிவ் எண்ணெயில் 72 % MUFA மற்றும் 10 % PUFA (இதுவும் 'நல்ல' கொழுப்பே) இருப்பதுடன் தீய கொழுப்பான SFA 13 % மாத்திரமே இருக்கின்றது. இதே வேளை இலங்கையில் அதிகமாக உட்கொள்ளப்படும் பாம் எண்ணெயில் 81 % இருப்பது SFA கொழுப்பாகும்!
ஆலிவ் எண்ணெயை பயன் படுத்தி உணவு சமைத்தல்
ஆலிவ் எண்ணெயை சமையலில் பயன் படுத்தும் போது, குறிப்பாக அதைக் கொண்டு எதையாவது வறுக்கும் அல்லது பொரிக்கும் போது புகை வரும் அளவு ஆலிவ் எண்ணெயை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சூடாகும் போது ஆலிவ் எண்ணெயின் இரசாயன கட்டமைப்பு மாற்றமடைந்து அதில் உள்ள போஷனைப் பதார்த்தங்கள் வீணாகி விடுவது மட்டுமல்லாமல், உடலாரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய சில கொழுப்பு வகைகள் உருவாகின்றன. எந்தளவு ஆலிவ் எண்ணெய் சுத்தமாக இருக்கின்றதோ அந்தளவு அதன் பயன் முழுமையாக இருக்கும். எனவே ஆலிவ் எண்ணெயை எதுவும் செய்யாமல் அப்படியே பச்சை மரக்கரிகளுடன் சேர்த்து உண்பதே சமைத்த உண்பதை விட அதிக பயனுள்ளதாகும். மேலும் எக்ஸ்ட்ரா வேர்ஜின் எனப்படும் பதப்படுத்த ஆலிவ் எண்ணெய் வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை
ஆலிவ் எண்ணெயில் உள்ள பல்வேறுபட்ட கூறுகள் மூலம் உடலாரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள் பற்றி அறிய அண்மைக்காலத்தில் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. அதன் போது இரத்த அழுத்தம், இருதய நோய், மூட்டு வாதம், மார்பு புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், சரும புற்றுநோய், குடல் மற்றும் சுவாசப்பை அழற்சி போன்ற நோய்களை ஆலிவ் எண்ணெய் தடுக்கின்றமை அல்லது அவற்றிற்கு சிகிச்iயாக செயற்படுகின்றமை புலனாகியது.
வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள்
1. தீமையான கொழுப்புக்கள் அதிகமுள்ள எண்ணெய் வகைகளை நீங்கள் சமையலுக்குப் பயன் படுத்துவதாயின் அவற்றை ஒதுக்கி விட்டு ஆலிவ் எண்ணெயை பயன் படுத்த ஆரம்பித்தல் விவேகமாகும்.
ஆலிவ் ஆயிலில் நன்மை தரும் கொழுப்பு உள்ளது. இது உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை, இயல்பாக்குகிறது.
ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பாக டைப் 2 டயாபடீஸைக் குறைக்க முடியும்.
வயது முதிர்வால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அதை தடுக்கும் ஆற்றல் ஆலிவ் ஆயிலுக்கு உண்டு.
இதில் உள்ள நல்ல கொழுப்பு, லிபோபுரோடினை குறைத்து, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது.
தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தினால், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றை தடுக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் பாதங்களை பேணுவது ஏன் முக்கியம்!!!பாதங்களை இழக்க நேரிடும் அபாயம் ஏன்? இந்தியாவில் இன்றைய பொழுதில் 8 கோடி நீரிழிவு நோயாளிகள் வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் சில கோடி மக்கள் இருக்கின்றனர். இந்த சர்க்கரை நோய் ஆட்கொண்ட மக்களுக்கு முக்கியமானது "கால்களில் ஏற்படும் புண்" குறித்த பிரச்சனை. இதை Diabetic foot ulcer என்கிறோம். ஏனைய பிறருக்கு வரும் பாத புண்ணுக்கும் ஒரு நீரிழிவு நோயாளிக்கு வரும் பாத புண்ணுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உரிய வித்தியாசம் உள்ளது. காரணம் சரியாக இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்காத ஒரு நீரிழிவு நோயாளிக்கு அவருக்கு வந்த புண் சீக்கிரம் ஆறாது, சரி புண் வந்தால் சரியாக ஆறுவது கடினம் என்று தெரியும். ஆனால் பலருக்கு தங்கள் கால்களில் புண் ஏற்பட்டதே பல நாட்கள் தெரியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. எந்த உணவு கட்டுப்பாடுமின்றி உங்கள் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர விரும்பினால் தொடர்பு கொள்ளவும், 9942613161 (call/whatsapp) or click here எப்படி முற்றிய நீரிழிவு நோய் உள்ள ...
நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் யோகா சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புத்தன்மை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது. மன அழுத்த நிவாரணி Breating exercise இளைஞர் பலர் கட்டுடலுக்காக ஜிம் முக்கு செல்கிறார்கள் . Gym workouts ஆனால் கட்டுடலுடன் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது யோகா. இந்த பயிற்சியை செய்ய எந்த ஒரு உபகரணங்களும் தேவையில்லை. மருந்துகள் இல்லாமல் நோயை விரட்டுவது இதன் தனித்துவ குணம். யோகாவில் ஏராளமான ஆசனங்கள் உள்ளன. கல்வியை போல தான் இதுவும் கடல் போன்றது. இருப்பினும் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை அடிப்படை யோகா பயிற்சிகளை செய்தாலே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உழைக்க ஆற்றலை தருகிறது. Meditation இன்றைய குடும்ப, பணி சூழல், மன அழுத்தம் நிறைந்ததாக மாறி இருக்கிறது. மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும் சிறந்த நிவாரணியாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள...
சிசேரியன் கீறல் வலியை போக்க மருத்துவ குறிப்புகளும்(நிபுணர்களின் கருத்து) அறுவை சிகிச்சைக்கு பிறகு சிசேரியன் செய்த இடத்தில் வலியை உணர்கிறீர்களா!!! குழந்தையை பெற்றெடுப்பது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது வரை பெண்கள் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். கர்ப்ப காலத்தில் பலவிதமான மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றன. ஒரு சில மாற்றங்கள் பிரசவத்திற்கு பிறகும் தொடர்கின்றன. சுகப்பிரசவம் அல்லது சிசேரியன், எதுவாக இருந்தாலும் குழந்தையை பெற்றெடுத்தபின் பல உடல் நல மாற்றங்களையும், வலிகளையும் அவர்கள் சந்திக்கின்றனர். சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு மீட்பு நேரம் அதிகமாக தேவைப்படும். ஏனெனில் இந்த பெரிய அறுவை சிகிச்சையில் குழந்தையை வெளியே எடுக்க வயிற்றின் ஏழு அடுக்குகள் வரை கிழிக்கப்படுகிறது. மற்ற அறுவை சிகிச்சையைப் போலவே இதுவும் குணமடைவதற்கு நேரம் எடுக்கும். கீறல் நான்கு முதல் ஆறு அங்குலம் வரை ஆழமாக இருப்பதால் அவை முழுமையாக ஆற சில மாதங்கள் வரை ஆகலாம் . இந்நிலையில் சிசேரியன் செய்த இடத்தில் வலியை பெரும்பாலான தாய்மா...
Comments
Post a Comment